கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-21 11:44 GMT
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோட்டாத்தூர் கீழக்குன்னுப்பட்டி வழகியாக தினமும் துறையூருக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலையில் சீக்கிரமாக சென்று விடுகிறது. இதனால் காலை 8 மணிக்கு மேல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் காலையில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே காலை 8 மணிக்கு மேல் கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்