பயணியர் நிழற்குடை வேண்டும்

Update: 2023-06-21 11:43 GMT
கரூர் மாவட்டம், வெள்ளியணை சாலையில் கல்லுமடை அம்மன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. மருதம்பட்டி காலனி, பெருமாள் பட்டி காலனி, மாணிக்கபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் வெயில், மழை நேரத்தில் அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள பயணியர் நிழற்குடை இல்லாமல் அவதிபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுகக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்