போக்குவரத்து இடையூறு

Update: 2023-06-18 07:30 GMT

தக்கலையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கல்குளம் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவகலத்தின் முன்பு தேசிய நெடுஞ்சாலையோரம் கடந்த 6 மாதங்களாக ஒரு பொக்லைன் எந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் இடையூறாக காணப்படுகிறது. மேலும், வாகனத்தின் அருகில் ெசல்லும் போது சாலையில் ஒரு பகுதியில் நடந்து செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இடையூறாக காணப்படும் பொக்லைன் எந்திரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவனி சதீஷ், தக்கலை.

மேலும் செய்திகள்