பயணிகள் அவதி

Update: 2023-06-14 15:18 GMT

திருவள்ளூர், பேரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பஸ் நிலையத்தில் நாள் தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வெளி ஊர்களுக்கு சென்று வருகிறது. ஆனால், இந்த பஸ் நிலையத்தில் நாற்காலி , குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால், பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்