போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-06-11 17:01 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் உள்ளதால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் கால்நடைகள் சாலைகளில் படுத்துக்கொள்வதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்