வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-06-11 12:14 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கருமத்தம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கீழ் பகுதியில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடவில்லை. இதனால் அங்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் சாலையோரம் நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்