புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-06-04 13:22 GMT

அரியலூர் மாவட்டம், சின்னவளையத்தை அடுத்த அரங்கநேரி அருகே உள்ள அரசு வரும் மாணவ-மாணவிகள் பள்ளி அருகே உள்ள சாலையை கடப்பதற்கு ஏதுவாக சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால் அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளதால், மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாய நிலை உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்