அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்கள்

Update: 2023-06-04 11:43 GMT

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர், புன்செய்புகழூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் இடம் புகழூர் ஆரம்பப்பள்ளி அருகே உள்ளது. இந்த இடத்தில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலையில் கதவணைக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இங்கு கோவில்கள் மற்றும் ரேஷன் கடைகள் செயல்படுவதால் இங்கு முதியோர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இங்கு கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். கோடை விடுமுறை என்பதாலும் இங்கு குழந்தைகள் சாலைகளில் விளையாடி வருகின்றனர். இந்த கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதால் விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி