நடவடிக்கை தேவை

Update: 2023-06-04 07:32 GMT

குளச்சலில் புதிதாக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்காலிகமாக அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் முன்பு பஸ்நிலையம் அமைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இருந்து பஸ்கள் ஒருவழியாக மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படவும், விபத்துகள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தற்காலிக நிலையத்துக்கு வரும் பஸ்கள் அனைத்தும் ஒரே வழியாக வந்து செல்லவும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகவும், போக்குவரத்து காவல் துறையையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

மேலும் செய்திகள்