கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2023-05-31 13:52 GMT
புதுக்கோட்டையில் இருந்து ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி வழியாக கந்தர்வக்கோட்டைக்கு 4 எண் கொண்ட நகர பஸ் இந்த வழியாக வந்து செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள் என இந்த வழித்தடத்தில் சென்று வருகின்றனர். ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுவதால் அனைவரும் சிரமமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி