உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-05-31 13:51 GMT
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆதனக்கோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டி செல்லும் விளக்கு சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உயர்மின் கோபுர விளக்கு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளத. இதனால் இரவு நேரங்களில் அந்த இடம் இருட்டாக காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லும் பதாசாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனனவே சம்பந்தப்பட்ட உடனடியாக உயர்மின் கோபுர மின் விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி