வளைவுகளால் விபத்துகள் அதிகரிப்பு

Update: 2023-05-31 10:46 GMT

வளைவுகளால் விபத்துகள் அதிகரிப்பு

திருப்பூர் முருகம்பாளையம், இடுவம்பாளையம், சுண்ட மேடு ஆகிய வழியாக பல்லடம் சாலையை சென்றடைய வேண்டும். தினமும் 100-க்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இடும்பாளையம் பகுதியில் இருந்து சுண்ட மேடு பகுதி வரை சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆபத்தான வளைவுகள் உள்ளது. அதிக இடங்களில் வளைவுகள் இருப்பதால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன. மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சாலையை மேம்படுத்தி, வளைவுகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முகப்பு கண்ணாடி வைக்கவும், தார் சாலையை மேம்படுத்தவும், தெருவிளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்பிரமணியம்,முருகம்பாளையம்.

9876575642

மேலும் செய்திகள்

பஸ் வசதி