பயணிகள் நிழற்குடையை சரி செய்ய கோரிக்கை

Update: 2023-05-28 10:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் இருந்து வடக்குத்தொண்டைமான் ஊரணி வரை செல்லும் சாலையில் தெற்கு தொண்டைமான் ஊரணி பிரிவு சாலை அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டபப்ட்டது. தற்போது பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை மற்றும் சுவர்களில் பல்வேறு இடங்களில் உடைந்து விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி