இரவு நேர பஸ்களை தடையின்றி இயக்க வேண்டும்

Update: 2023-05-28 10:51 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது இல்லை. குறிப்பாக இரவு 8 மணி தொடங்கி இரவு 1 மணி வரை இயக்கப்படும் 6 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் அரசு பஸ்களும் சரிவர இயக்கப்படுவது இல்லை. இதனால் தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவமனைக்கு சென்று திரும்பும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் பஸ்களை தடையின்றி இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி