பயணியர் நிழற்குடை வேண்டும்

Update: 2023-05-28 10:49 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் ஏ.வி.எம். கார்னர் முக்கியமான பகுதியாகும். கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்களும், திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் பஸ்களும் அரவக்குறிச்சியில் ஏ.வி.எம். கார்னர் பகுதி தான் பிரதான பஸ் நிறுத்தம் ஆகும். அரவக்குறிச்சிக்கு தினமும் ஏராளமானோர் அலுவலக விஷயமாக வந்து செல்கின்றனர். அதேபோன்று இங்கிருந்து தினமும் அதிகமானோர் வேலை விஷயமாக வெளியூர்களுக்கு செல்கிறார்கள். பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் ரோட்டு பகுதியிலேயே பஸ்சுக்காக வெயிலில் காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி