மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-28 09:17 GMT

சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, பட்டணம் புதூர். இந்த ஊர் வழியாக அக்கநாயக்கன்பாளையம்-காந்திபுரம் வழித்தடத்தில் 69 சி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் உதவியாக இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை அந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மீண்டும் அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி