மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-28 09:17 GMT

சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, பட்டணம் புதூர். இந்த ஊர் வழியாக அக்கநாயக்கன்பாளையம்-காந்திபுரம் வழித்தடத்தில் 69 சி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் உதவியாக இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை அந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மீண்டும் அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்