ஆபத்தான பஸ் நிலைய கட்டிடம்

Update: 2023-05-24 13:23 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் உள்ள பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து செல்லுவதினால் ஆபத்தான நிலையில் உள்ள இந்த பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்படும் ஆபத்தான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி