இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் வேண்டும்

Update: 2023-05-24 13:18 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி