போக்குவரத்து மாற்றப்படுமா?

Update: 2023-05-17 10:46 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து தினமும் இரவு சென்னைக்கு 5 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்கள் சென்னை சென்றவுடன் மீண்டும் அங்கிருந்து அதே வழித்தடத்தில் பெரம்பலூர் வரை வந்து அதன் பிறகு திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் வந்தடைந்து பிறகு தான் துறையூர் வருகிறது. இதனால் சென்னையில் இருந்து துறையூருக்கு பகல் நேரத்தில் பஸ் வசதி இல்லாமல் பயணிகள் தடுமாற வேண்டி உள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் மீண்டும் அதே ஊர்களுக்கு திரும்பி வரும் நிலையில் துறையூருக்கு மட்டும் பஸ்கள் காலை நேரத்தில் சென்னையில் இருந்து நேரடியாக இல்லை. எனவே 5 பஸ்களில் துறையூர் டெப்போவை சேர்ந்த ஒரே ஒரு சூப்பர் டீலக்ஸ் பஸ்சை மட்டும் சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு பெருங்களத்தூர், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, தொழுதூர், பெரம்பலூர் வழியாக துறையூருக்கு இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி