பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-05-17 09:31 GMT

கோவை கவுண்டம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வந்ததால், அந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டனர். தற்போது மேம்பால பணிகள் நிறைவு பெற்று விட்டன. ஆனால் பயணிகள் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் காத்து கிடக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி