நிழற்குடையில் பஸ் நின்று செல்லுமா?

Update: 2023-05-14 16:29 GMT
பண்ருட்டி லிங்க் ரோட்டில் தனியார் பள்ளி அருகில் கடந்த 2016-ம் ஆண்டு புதிதாக நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிழற்குடை பாழடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே நிழற்குடையை சீரமைத்து, அங்கு பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களி்ன் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி