போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-05-14 13:01 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதியில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் ஒரு சில மாடுகள் சாலையில் படுத்துக் கொள்வதினால், இதனை கவனிக்காமல் சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி