பயணிகள் நிழற்குடை கட்டித்தரப்படுமா?

Update: 2023-05-10 12:58 GMT
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையில் அதியமான் கோட்டை, கரியாம்பட்டி, ஓலப்பாளையம் ,நல்லிக் கோவில், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரிவு சாலை எதிரே அரசு பஸ்கள் நின்று செல்கிறது. இங்கிருந்து மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது வெயில் மற்றும் மழை பெய்து வருதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி