போக்குவரத்து இடையூறு

Update: 2023-05-10 09:21 GMT

தக்கலையில் பஸ்நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். இதனால், பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வரும் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்திகின்றனர். இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ் நிலைத்திற்குள் மோட்டார் சைக்கிள் நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது சபிர், குளச்சல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி