வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-07 10:56 GMT
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை சேலம்-மதுரை, கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேம்பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இந்த இருபுறங்களில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் பாலத்துறை முதல் தவுட்டுப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து மெதுவாக நடைபெற்று வருகிறது. .அதே போல் அப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சாலையின் அருகிலேயே கார்களை, லாரிகளை நிறுத்தி விட்டு சாப்பிட சென்று விடுகின்றனர். இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவில் தார் சாலை உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி