ரெயில்வே கேட் பாதுகாவலர் தேவை

Update: 2023-04-30 10:21 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி உப்புகாரன் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் பாதுகாவலர் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் அலட்சியத்துடன் கடந்து செல்கின்றனர். தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்லும் வழிதடத்தில் இவ்வாறு நடப்பது ஆபத்தை விளைவிக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ரெயில்வே கேட் பாதுகாவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்