அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-04-26 15:00 GMT

ஈச்சனாரியில் இருந்து துடியலூருக்கு சுந்தராபுரம், குறிச்சி, ஆத்துப்பாலம், வடகோவை, கவுண்டம்பாளையம் வழித்தடத்தில் ஏ4 என்ற சாதாரண கட்டணம் டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பஸ்சை பயன்படுத்தி வந்த பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் கவனித்து மீண்டும் அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்