நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2023-04-26 14:06 GMT

கரூர் மாவட்டம், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ள தளவாப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பஸ்கள் நிறுப்பதில்லை. அருகில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இருப்பதால் இங்குள்ள மாணவ- மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையிலே பஸ்களை நிறுத்தி ஏறிக்கொள்வதால் நிழற்குடைக்கு பஸ்கள் வந்து நிற்பதில்லை. அங்கு நிறுத்தி பஸ் ஏறிக்கொள்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்பகுதி மக்கள் அங்கு சென்று பஸ் ஏறி செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி