பாதியில் திரும்பும் அரசு பஸ்

Update: 2023-04-19 17:37 GMT
சிதம்பரத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு, கானூர், பேரூர் வழியாக ஸ்ரீமுஷ்ணத்திற்கு இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில நாட்களில் இந்த பஸ் சிதம்பரத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லாமல், சேத்தியாத்தோப்பு வரை மட்டும் சென்று திரும்பி விடுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அனைத்து நாட்களிலும் சிதம்பரத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வரை பஸ்சை இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி