பயணிகள் அவதி

Update: 2023-04-09 07:13 GMT

கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து கருமத்தம்பட்டி வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் 5 முறை 32 எண் கொண்ட நகர்ப்புற பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலை, மாலை என 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அந்த பஸ்சை நம்பியிருக்கும் பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே வழக்கம்போல் அந்த பஸ்சை தினமும் 5 முறை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்