நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-05 08:02 GMT

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பாரி வள்ளல் வீதியில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை குடிநீர் குழாய் பதிக்க தோண்டி இருக்கின்றனர். குடிநீர் குழாய் பதித்த பிறகும் நடைபாதையை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் நடைபாதை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் கற்கள் பெயர்ந்து கிடப்பதால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த நடைபாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி