'ஏர்ஹாரன்'கள் அகற்றப்படுமா?

Update: 2023-03-26 15:47 GMT

கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சில தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய 'ஏர்ஹாரன்'கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் தொடர்ந்து ஏர்ஹாரனை ஒலித்த வண்ணம் செல்கிறார்கள். இதனால் பிற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிக ஒலி எழுப்ப கூடிய 'ஏர்ஹாரன்'களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்

பஸ்வசதி