அரசு பஸ் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுமா?

Update: 2023-03-22 14:15 GMT
புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி, ரெகுநாதபுரம் வழியாக கிளாங்காட்டிற்கு இயக்கப்படும் அரசு பஸ் புதுக்கோட்டை விடுதி கிராமத்திற்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக காலை நேரத்தில் மட்டுமே அரசு பஸ் புதுக்கோட்டை விடுதிக்கு வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் காடம்பட்டி முக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கிளாங்காட்டிற்கு இயக்கப்படும் அரசு பஸ்சை வழித்தடம் மாறாமல் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி