சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-03-19 16:52 GMT
மதுரை சிம்மக்கல் வடக்கு வெளி வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாட்டுத்தாவணி, அழகர்கோவில், நத்தம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் அங்கு அமைக்கப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை பெயர்ந்து உள்ளது. இதனால் மழை பெய்யும்போது பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்