கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா

Update: 2023-03-19 13:12 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து சிவகாசிக்கு செல்லும் வழியில் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன. மேலும் சாத்தூரிலிருந்து சிவகாசிக்கு வேலைக்கு செல்பவர்களும் அதிகமாக உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். மேலும் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி