தரமான பஸ் தேவை

Update: 2023-03-15 12:17 GMT

மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து கோதையார், சிலோன் காலனி, பேச்சிப்பாறை உள்ளிட்ட மலையோர பகுதிகளுக்கு அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. மேலும், இயக்கப்படும் பஸ்களும் பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் அச்சத்துடனேயே பயணம் செய்து வருகின்றனர். மேலும், சில பஸ்கள் புறநகர் கட்டணத்தில் இயக்கப்படுதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தரமான பஸ்களை முறையாகவும், சரியான கட்டணத்துடனும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுஜின், கடையல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி