போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-12 16:52 GMT

கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டாரத்தில் உள்ள வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி என பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காந்தி சாலை வழியாக வந்து 5 ரோடு ரவுண்டானா அருகில் பிரிந்து செல்கின்றன. இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே 5 ரோடு ரவுண்டானாவை சுற்றி உள்ள பஸ் நிறுத்தங்களில் டவுன் பஸ்களை நீண்ட நேரம் நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி