கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-03-12 14:11 GMT
புதுக்கோட்டையில் இருந்து வெள்ளாகுளத்திற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஒரு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே வெள்ளாகுளத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி