கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-03-08 13:21 GMT
புதுக்கோட்டையில் இருந்து பெருங்குடி, முனசந்தை, செங்கீரை வழியாக ராயவத்திற்கு தினமும் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த அரசு பஸ் புதுக்கோட்டையில் இருந்து ராயவத்திற்கும், ராயவரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று வர சுமார் 1.30 மணி நேரம் இடைவெளி ஆகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவரச நேரத்திற்கு சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி