லாரிகளால் ஏற்படும் விபத்துகள்

Update: 2023-03-08 10:50 GMT
கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் பலர் சர்வீஸ் சாலையை பயன்படுத்துகிறார்கள். அந்த வழியாக சென்று சுங்கச்சாவடி அருகில் சாலையை கடந்து செல்கிறார்கள். அந்த சர்வீஸ் சாலையில் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்களால் விபத்துகள் நடக்கின்றன. அதே போல சுங்கச்சாவடி அருகிலும் அதிக அளவில் லாரிகள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சர்வீஸ் சாலையிலும், சுங்கச்சாவடி அருகிலும் லாரிகளை நிறுத்தாமல் இருக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி