பஸ்நிலையம் பராமரிக்கப்படுமா?

Update: 2023-03-05 16:10 GMT

சேலம் புதிய பஸ்நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் கடைகளும் ஏராளம் உள்ளன. பஸ் நிலையத்தின் உள்ளே பயணிகள் உட்காரும் இடங்களில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி சுகாதாரமற்று காட்சி அளிக்கிறது. மேலும் பயணிகள் அங்கு உட்காரவே முகம் சுழிக்கிறார்கள். எனவே பயணிகளின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்படாத பொருட்களை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்