தேனி அருகே குன்னூர் வைகை ஆற்று பாலத்தின் ஓரத்தில் வழிகாட்டி பெயர் பலகையில் இருந்த எழுத்துகள் அழிந்துவிட்டன. இதனால் எந்த ஊருக்கான வழிகாட்டி பலகை என்பது தெரியவில்லை. மேலும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வழிகாட்டி பலகை இருந்தும் எழுத்துகள் இல்லாததால் அது பயனற்றதாகி விட்டது. எனவே வழிகாட்டி பெயர் பலகையில் ஊர் பெயர் இருக்கும் வகையில் முறையாக பராமரிக்க வேண்டும்.