தெருவின் நடுவே அடிபம்பு

Update: 2023-03-05 08:14 GMT

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள அடிபம்பானது, மக்கள் நடந்து செல்லும் சாலையின் நடுவே உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த தெருவின் வழியே செல்ல முடியாமல் அடிபம்பு தடையாக உள்ளது. புதிதாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள, அடிபம்பு இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலையும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள அடிபம்பை மாற்றி அமைப்பதற்கோ அல்லது அடிபம்பினை சுற்றி வேலி அமைத்து தரவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி