நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

Update: 2023-03-01 12:05 GMT

கரூரிலிருந்து தான்தோன்றிமலை வழியாக திண்டுக்கல் செல்லும் சாலையில் வெள்ளியணைக்கு முன்பாக மணவாடி அமைந்துள்ளது. இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு சாலை விரிவாக்கத்துக்காக அந்த பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. தற்போது சாலை பணிகள் முடிவடைந்து பயன்பாட்டில் உள்ளது. தற்போது இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் வசதிக்காக புதிய நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்