பயணிகள் நிழற்குடை பரிதாபம்

Update: 2023-02-26 16:33 GMT

சின்னமனூர் ஒன்றியம் கிழக்கு அப்பிபட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை மது பாராக மாறி விட்டது. பயணிகள் நிழற்குடைக்குள் அமர்ந்து மது குடித்து விட்டு, பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். மேலும் அங்கேயே அசுத்தம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்