இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்

Update: 2023-02-22 11:45 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரம் ஊராட்சியில் சுமார் 1,000 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்