நிறுத்தப்பட்ட பஸ் சேவை

Update: 2023-02-22 11:43 GMT

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கொப்பம்பட்டியை சுற்றியுள்ள கிராம பகுதி மற்றும் திருச்சி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிராம மக்கள் சென்னை சென்று வந்தனர். இந்த பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மாறி மாறி பஸ் ஏறி சென்னை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்