கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2023-02-22 09:06 GMT

கோவைப்புதூர்-காந்திபுரம் வழித்தடத்தில் 3டி என்ற எண் கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மாலை நேரத்தில் குறைந்த எண்ணிக்கையில்தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று திரும்புபவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி