கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-02-08 15:14 GMT

விருதுநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவு தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்