மதுரை மாட்டுதாவணி மேலூர் ரோடு சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பூ மார்க்கெட், உத்தங்குடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.